வணிக வரித்துறைஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
அரசு பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வணிக வரித்துறை ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், ஜன., 18, 19ல், விடுப்பு போராட்டம் நடத்தினர். இரண்டு நாட்களாக, சங்க நிர்வாகிகள் சென்னையில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் சம்பத், துறை உயர் அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தினர். பணி மூப்பு குளறுபடிக்கு தீர்வு காண்பதில் உறுதியான முடிவை அறிவிக்காததால், பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதனால், அதிருப்தி அடைந்த ஊழியர் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்துள்ளன. 6,000 பேர் இதில் பங்கேற்பதால், வரி வசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.