19 ஆசிரியர்களுக்கு 'மெமோ'
திருவண்ணாமலை: பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள், 'பிட்' அடித்ததை கண்டுகொள்ளாத, 19 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பிளஸ் 2 கணக்குப் பதிவியல், வேதியியல் தேர்வின் போது, 'பிட்' அடித்த, 19 மாணவர்கள் பிடிபட்டனர்; இதில், 17 பேர் தனித்தேர்வர்கள். பிட் அடித்ததை கண்டுகொள்ளாமல் இருந்த, 19 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுத்துள்ளனர்.திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அதிகாரி பொன்னையா கூறுகையில், ''பிட் அடித்த மாணவர்கள் தேர்வு எழுதிய அறையில், பணியில் இருந்த ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, அரசு உத்தரவிட்டு உள்ளது. தற்போது, 19 ஆசிரியர்களுக்கு, மெமோ மட்டும் கொடுத்துள்ளோம். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டால், தேர்வு பணி பாதிக்கும் என்பதால், நடவடிக்கை எடுக்கவில்லை,''என்றார்.-
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.