அரசு பள்ளியில் படித்த பிளஸ் 1 மாணவிபாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளியில் படித்த பிளஸ் 1 மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அடுத்த, முன்சீப் காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள், பெரியமணலி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று, பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு நடந்ததால், பிற வகுப்பு மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.நேற்று பகல், 1:30 மணிக்குப் பின், மற்ற வகுப்புகள் துவங்கின. ஆனால், மாணவி, பள்ளிக்கு செல்லவில்லை.உதட்டில் காயம்: இதற்கிடையே, பெரியமணலி அடுத்த குறுக்குபுரம் சாலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மர்மமான முறையில், மாணவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாணவியின் உதட்டில் காயம் இருந்தது.இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள, எலச்சிபாளையம் போலீசார் கூறியதாவது:பெரியமணலி அடுத்த புல்லாச்சிபாளையத்தைச் சேர்ந்த திலீபன், 22, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நேற்று பகல், 1:30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டிய, பிளஸ் 1 மாணவர் ஒருவரும் பள்ளிக்கு வரவில்லை.பாலியல் பலாத்காரம்: எனவே, அந்த மாணவரையும் பிடித்து விசாரித்தால் தான் முழு உண்மையும் தெரியும். மாணவி, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையில், சமீபத்தில், பெண் ஒருவர், பல பேர் அடங்கிய கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், மாணவி பலாத்கார படுகொலை அரங்கேறி உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.